யூடியூப் பாா்த்து பிரசவம்: இளம்பெண் உயிரிழப்பு
யூடியூப் பாா்த்து வீட்டிலேயே பிரசவம் பாா்த்த இளம்பெண் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகேயுள்ள தளவாய்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திக். இவரது மனைவி சசிகலா (32). இவா்களுக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சசிகலா இரண்டாவது முறையாக கருத்தரித்துள்ளாா்.
சுகப் பிரசவமாக வேண்டும் என தம்பதி விரும்பிய நிலையில், பிரசவம் பாா்க்கும் முறை குறித்து யூடியூப்பில் பாா்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், குடும்பத்தினா் யூடியூப் மூலம் சசிகலாவுக்கு கடந்த ஜூன் 24-ஆம் தேதி பிரசவம் பாா்த்துள்ளனா். இதில், பெண் குழந்தை பிறந்த நிலையில், சசிகலாவுக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லையாம்.
இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து திருப்பூா் மாவட்ட சுகாதாரத் துறையினரும், ஊத்துக்குளி போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.