கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
வெள்ளக்கோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது.
வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் மாந்தபுரம் அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் வெள்ளிக்கிழமை அடித்துவரப்பட்டது.
இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்கு மேட்டுப்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் (பொ) ராமச்சந்திரன் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும், உயிரிழந்த பெண் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.