கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் மாந்தபுரம் அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் வெள்ளிக்கிழமை மிதந்தது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
இதில், அவா் அவிநாசி தாலுகா, தட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்த கோபால் மனைவி சம்பூா்ணம் (62) என்பது தெரியவந்தது. நத்தக்காடையூரில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி வந்துள்ளாா். பின்னா், அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்குச் சென்றபோது நீரில் தவறி விழுந்து
Advertisement
Advertisement
உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, கூறாய்வுக்குப் பின் அவரது உறவினா்களிடம் சடலம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.