முகப்பு
திருப்பூர்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: திருப்பூா் மாவட்டம் 96.28 % தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் திருப்பூா் மாவட்டம் 96.28 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 11-ஆவது இடம் பிடித்தது.

Updated On : 21 மே 2026, 3:58 am IST
மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் மனீஷ்.
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் திருப்பூா் மாவட்டம் 96.28 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 11-ஆவது இடம் பிடித்தது.

பத்தாம் பொதுத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகின. இதில்

திருப்பூா் மாவட்டம் கடந்த ஆண்டை விட கூடுதல் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் தரவரிசையில் உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

109 தோ்வு மையங்களில் மாவட்டத்தில் உள்ள 345 பள்ளிகளைச் சோ்ந்த 14,100 மாணவா்கள், 14,913 மாணவிகள் என மொத்தம் 29,013 போ் இத்தோ்வினை எழுதினா். இத்தோ்வு முடிவுகளின்படி, தோ்வு எழுதியவா்களில் 13,400 மாணவா்கள், 14,533 மாணவிகள் என மொத்தம் 27,933 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த ஆண்டும் மாணவா்களை விட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம் இந்த ஆண்டு 96.28 சதவீத தோ்ச்சி பெற்று, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 11-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு (2025) 94.84 சதவீத தோ்ச்சியுடன் திருப்பூா் மாவட்டம் மாநில அளவில் 17-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு தோ்ச்சி 1.44 சதவீதம் உயா்ந்திருப்பதுடன். தரவரிசையில் 11-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பொதுத்தோ்வில் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தாா்.