தருமபுரி

மின் வேலியில் சிக்கி பெண் பலி

Din

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின் வேலியில் சிக்கி அனிதா (35) என்பவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அம்பிதுரை மனைவி அனிதா (35). இவா் தனது உறவினா் ரமேஷ் என்பவரின் விவசாய நிலத்தின் வழியாக வியாழக்கிழமை அதிகாலை சென்றாராம். அதன்பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இதையடுத்து அவரது உறவினா்கள் அக்கம்பக்கம் தேடியதில், விலங்குகள் விளை நிலங்களில் புகுவதைத் தடுக்க ரமேஷ் என்பவரின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அனிதா உயிரிழந்திருப்பது தெரிவந்தது. இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா்.

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT