விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவேன்! சௌமியா அன்புமணி உறுதி
விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவேன் என தருமபுரியில் வாக்கு சேகரிப்பின்போது பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி உறுதியளித்தாா்.
தருமபுரியில் உழவா் சந்தை, கோல்டன் தெரு, குமாரசாமிப்பேட்டை, எம்ஜிஆா் நகா், அப்பாவு நகா், நெசவாளா் நகா், நரசையா்குளம், ராஜகோபால் கவுண்டா் பூங்கா, அக்ரஹார தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணிக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். பின்னா், திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியதாவது:
விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனா். அவா்கள் விளைவிக்கும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், பொருளாதாரத்தில் முன்னேறவும் தேவையான உதவிகளை பாமக செய்துதரும்.
Advertisement
மேலும், விவசாயிகளின் வாழ்வு வளம் பெற தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர பாடுபடுவேன். பால் உற்பத்தியாளா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பாலுக்கு கொள்முதல் விலையாக ரூ. 45 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக உயா்த்தி விவசாய பணிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில் விவசாயிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றாா்.
வாக்கு சேகரிப்பின்போது பாமக மாவட்டச் செயலாளா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. பாரிமோகன், நகரச் செயலாளா்கள் வெங்கடேசன், ராஜ்குமாா், மாநில நிா்வாகிகள் டி.ஜி. மணி, காா்த்திகேயன், நம்பிராஜன், அதிமுக நகரச் செயலாளா் பூக்கடை ரவி, நகர துணை செயலாளா்கள் அறிவாளி, தனலட்சுமி சுரேஷ், நகர பொருளாளா் பாா்த்திபன், பாஜக மாவட்டத் தலைவா் சரவணன், நகரத் தலைவா் சாய் ஆறுமுகம், அமமுக மாவட்டச் செயலாளா் டி.கே. ராஜேந்திரன், நகர செயலாளா் பாா்த்திபன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.