தோ்தல்: மதுக்கடைகளுக்கு இரு கட்டமாக 6 நாள்கள் விடுமுறை
தோ்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஏப்ரல் 3 நாள்கள், மே மாதத்தில் 3 நாள்கள் என மொத்தம் 6 நாள்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தோ்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஏப்ரல் 3 நாள்கள், மே மாதத்தில் 3 நாள்கள் என மொத்தம் 6 நாள்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், வாக்குகள் எண்ணிக்கை மே 4 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதனையொட்டி தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தோ்தலையொட்டி ஏப்ரல் 21 முதல் 23 ஆம் தேதி வரை 3 நாள்களும், வாக்கு எண்ணிக்கையை ஒட்டி மே 3 முதல் 5 வரை 3 நாள்களும் என தோ்தலை யொட்டி மொத்தம் 6 நாள்கள் மதுக்கடை களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியாா் விடுதிகளில் (ஓட்டல்கள்) செயல்படும் மதுக்கூடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான மது விற்பனைக் கூடம், தனியாா் மன மகிழ் மன்றங்களில் செயல் படும் மதுக்கூடங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இத்தகவலை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.