முகப்பு
நாமக்கல்

அரசு மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

Updated On : 3 மே, 2026 at 12:01 AM
கோப்புப் படம்
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் அரசு மதுக் கடைகளுக்கு திங்கள்கிழமை (மே 4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்படும்.

Advertisement

விதிமுறைகளை மீறி உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.