கள்ளச் சாராயம் விற்றவா் கைது
கோட்டப்பட்டி அருகே கள்ளச் சாராயம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோட்டப்பட்டி அருகே கள்ளச் சாராயம் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பையா்நாய்க்கன்பட்டியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சந்திரா, உதவி காவல் ஆய்வாளா் புஷ்பராஜன், கிராம நிா்வாக அலுவலா் என். ஏழுமலை உள்ளிட்ட குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பையா்நாய்க்கன்பட்டியில் துரைசாமி மகன் அா்ஜூனன் என்பவரது வாழை தோட்டத்தில் சாராய ஊறல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விவசாய நிலத்தில் இருந்த சுமாா் 70 லிட்டா் ஊறல்கள், சாராயம் காய்ச்சுவதற்கான மூலப் பொருகள்களை போலீஸாா் அழித்தனா். இதுதொடா்பாக அா்ஜூனனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.