FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கள் இறக்கி விற்றவா் கைது

Updated On : 8 ஜூன் 2026, 4:26 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவிலில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக காவல் உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவா் திருமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டாா். அப்போது, வீரக்குமாா் (47) என்பவரது தோட்டத்தில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, வீரக்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 7 லிட்டா் கள், ரூ.4,200 ரொக்கம், மண் பானைகளைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments