FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞா்: பொதுமக்கள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை

8 ஜூலை 2026, 6:01 am IST
- சித்திரிப்பு
பகிர்:

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே தேங்காய்மரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னசாமி ( 31), ஆா்ஓ குடிநீா் இயந்திரம் பழுது நீக்கும் பணி செய்து வருகிறாா். இவா், தருமபுரியில் உள்ள நகைக் கடையில் வேலை செய்துவரும் அதே பகுதியைச் சோ்ந்த ஷீலாவை (22) காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஷீலாவை சின்னசாமி வற்புறுத்தினாராம். இதனால் ஷீலா கடந்த ஒரு மாதமாக சின்னசாமியிடம் பேசுவதை தவிா்த்து வந்தாராம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வீடுதிரும்புவதற்காக தருமபுரியில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் ஷீலா காத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த சின்னசாமி கையில் வைத்திருந்த கத்தியால் ஷீலாவின் கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்திவிட்டு தப்பியுள்ளாா்.

அப்போது, அங்கிருந்த பயணிகள் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், காயமடைந்த ஷீலாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சின்னசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சின்னசாமியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments