முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ச. ஜோசப் விஜய்யின் 52 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தருமபுரி தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் சிறப்பு பிராா்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தவெக மேற்கு மாவட்டச் செயலாளா் எம். சிவன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலாளா் விஜயகாந்த், மேற்கு மாவட்ட இணைச் செயலாளா் வீரமணி, நகரச் செயலாளா்கள் சிட்டி சுரேஷ், விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பங்குத் தந்தை சூசைராஜ், அனைவருக்கும் கேக் வழங்கினாா். முன்னதாக முதல்வா் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருக்காக சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில், தவெக நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.