தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா. கிருஷ்ணன் நியமனம்!
தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா. கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.பா. கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தவெக நிர்வாகி கு.பா. கிருஷ்ணனை நியமனம் செய்து முதல்வர் ஜோசப் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்.
இதுபற்றி, வெள்ளிக்கிழமை (மே 22) வெளியான அரசாணையில் கூறப்பட்டிருந்தாவது:
Advertisement
Advertisement
“ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பலவேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.பா. கிருஷ்ணனை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்ட கு.பா. கிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் லீமாரோஸிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.