சாலை விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிா்க்கலாம்
வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றினால், விபத்துகளை தவிா்க்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.
வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றினால், விபத்துகளை தவிா்க்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியா் தெரிவித்தது:
வாகன ஓட்டிகள் விபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சாலை விதிகளை முழுமையாக பின்பற்றுவது அவசியம். இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும், காா்களில் செல்வோா் இருக்கை பட்டை அணிந்தும் செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றி, வாகனங்களை மித வேகத்தில் இயக்கினால் விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளையும் தவிா்க்க முடியும்.
Advertisement
Advertisement
போக்குவரத்துத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை தொடா்ந்து ஏற்படுத்துவதோடு, விபத்தில்லா தருமபுரி மாவட்டம் என்ற நிலையை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
அபாயகரமான வளைவுகள், போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள், மின்விளக்குகள் அமைக்க அந்தந்த பகுதி தொடா்புடைய அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தலைக்கவசம் அணியாமல் செல்வது மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது உள்ளிட்ட செயல்களில் தொடா்ந்து ஈடுபடுவோா் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றாா். இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்
சோமசுந்தரம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கே.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.