தருமபுரியில் சாலையில் கொட்டி வீணாகிய ரேஷன் அரிசி
தருமபுரியில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட அரிசி மூட்டைகள் சேதமடைந்திருந்ததால், வழியெங்கும் பொதுவிநியோகத் திட்ட அரிசி கொட்டி வீணாகியது.
தருமபுரியில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட அரிசி மூட்டைகள் சேதமடைந்திருந்ததால், வழியெங்கும் பொதுவிநியோகத் திட்ட அரிசி கொட்டி வீணாகியது.
தருமபுரி பாரதிபுரத்தில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் உள்ளது. இக்கிடங்கில் பொதுவிநியோகத் திட்டத்துக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகள் சேமித்துவைக்கப்பட்டு, அங்கிருந்து நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு அனுப்பப்படும். பின்னர், அக்கிடங்கிலிருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில், திங்கள்கிழமை தருமபுரி ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயில் மூலம் வந்த அரிசி மூட்டைகளை இறக்கி, லாரிகளில் பாரதிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, ரயில் நிலையத்திலிருந்து கிடங்குக்கு சென்ற இரண்டு லாரிகளிலிருந்த மூட்டைகள் சேதமடைந்திருந்ததால் அதிலிருந்து அரிசி சாலையில் கொட்டியது. மேலும், லாரியின் பின்னால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் முகத்திலும் அரிசி தெரித்து விழுந்தது.வழிவெடுகிலும் கிடங்கு வரை சுமார் 2 கி.மீ. தொலைவு வரை அரிசி கொட்டி வீணாகியது.