தருமபுரி

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பயிற்சி மையம் கோரி மனு

DIN

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்குப் பயிற்சி மையம்  அமைக்க அனுமதி கோரி, திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்துக்கு இளைஞர்கள் காளைகளுடன் வந்தனர்.
தருமபுரி மாவட்டம், கருங்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காளைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு லாவகமாக, பாதுகாப்பாகவும் மாடுகளை அடக்குவது, விதிகளை கற்பிப்பது, உடலை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிப்பது ஆகியன உரிய பயிற்சியினை இலவசமாக அளிக்க உள்ளோம். இதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். வள்ளல் அதியமான் ஆண்ட தருமபுரி மாவட்டத்தில் இந்தப் பயிற்சி மையம் அமைவது வெகு சிறப்பாக இருக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் பயிற்சி மையத்துக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT