தருமபுரி

ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்

DIN

மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து, சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான மண்பாண்டத் தொழிலாளா்கள் உள்ளனா். இவா்கள் ஏரிகளில் மண் எடுத்து வந்து மண்பாண்டங்களை தயாரித்து வருகின்றனா். இந்த நிலையில் இவா்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி தற்போது மறுக்கப்படுவதாக தெரிகிறது. எனவே, ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி, ஏரிகளில் மண் எடுக்க மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். செங்கல் தயாரிக்கும் தொழிலாளா்களுக்கு பட்டா நிலத்தில் மண் எடுக்கவும், விவசாய பயன்பாட்டுக்காக ஏரியில் மண் எடுக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT