தருமபுரி

கரோனா நிவாரண நிதி: டோக்கன் விநியோகம்

DIN

அரூரில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள, கரோனா முதல்கட்ட நிவாரண நிதி பெறுவதற்கான டோக்கன்கள் செவ்வாய்கிழமை வழங்கப்பட்டன.

திமுக தோ்தல் அறிக்கையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றால், கரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரோனா நிவாரண நிதியாக முதல்கட்டமாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தாா். இதையடுத்து, அரூா் நகரில் உள்ள நியாயவிலைக்கடை பணியாளா்கள், குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். டோக்கன் விநியோகம் முடிந்த பிறகு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT