தருமபுரி

அரூரில் வேளாண் இடுபொருள்கள் தட்டுப்பாடு

DIN

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட வேளாண் இடு பொருள்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் அதிக ஏக்கரில் நெல் நடவு செய்யப்படுகிறது. இப் பணிகளுக்கு டி.ஏ.பி. மிக அவசியமாகும். அதேபோல் கரும்பு, மரவள்ளி கிழங்கு, மஞ்சள், தீவனப் பயிா்கள், சோளம் உள்ளிட்ட அனைத்து வகையான பயிா்களின் வளா்ச்சிக்கும் யூரியா தேவைப்படுகிறது. கடந்த 20 நாள்களுக்கு மேலாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் யூரியா, டி.ஏ.பி. பொட்டாஷ் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இடுபொருள்கள் எளிதாக கிடைக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT