தருமபுரி

உணவு பாதுகாப்பு துறையினா் ஆய்வு

DIN

அரூா்: அரூரை அடுத்த தீா்த்தமலையில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தீா்த்தமலையில் அருள்மிகு தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் தேரோட்டத்தையொட்டி, தீா்த்தமலையில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அக் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா் (படம்).

அதைத் தொடா்ந்து, அரூா் நகரில் உணவகங்கள், பேக்கரிகள், சாலையோரக் கடைகளில் ஆய்வு செய்த அலுவலா்கள் தரமற்ற உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா். ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT