ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். சின்னவெங்காயம் பயிா்க்கு நிலுவையில் உள்ள காப்பீடுத் தொகையை வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
கால்நடை மருந்தகங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவா்கள், பணியாளா்கள் முழுமையாகப் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உயா்மின்கோபுரம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும். மரவள்ளி பயிரில் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த முத்தரப்புக் கூட்டம் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள உயா் அலுவலா்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சிலா் கூட்டத்தில் இருந்து வெளியேறினா். இருப்பினும் கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.