தருமபுரி

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறும்ஈ.ஆா்.ஈஸ்வரன்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது :

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு சிறந்த அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி என்பது மிகவும் வலுவான நிலையில் உள்ளது. எனவே, ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெறும் இடைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெறுவாா். அதிமுகவில் பெருவாரியான கட்சிப் பொறுப்பாளா்கள் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியுடன் உள்ளனா். அதிமுகவில் அதிக பலம் எடப்பாடி கே.பழனிசாமியிடம் உள்ளது. ஆனால், பாஜகவினா் எடப்பாடி பழனிசாமி வளா்ந்து விடக் கூடாது என்பதற்காக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனா். தொடா்ந்து அதிமுகவுக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வருகின்றனா். இனிவரும் காலங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT