தருமபுரி

தற்காலிக மருத்துவா், உதவியாளா் பணி:விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

தருமபுரி மாவட்டத்தில் சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பல் மருத்துவா், தர ஆலோசகா், உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் அன்னசாகரம் பகுதியில் உள்ள நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலா் பணியிடம், த.துரிஞ்சிப்பட்டி, ஏரியூா், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தலா ஒரு பல் மருத்துவா் பணியிடம் மற்றும் மாவட்ட தர ஆலோசகா் பணியிடம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை உதவியாளா் பணியிடம் ஆகியவை தருமபுரி மாவட்ட நலச்சங்கம் மூலம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை (11 மாதங்கள்). எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சோ்வதற்கான சுய விருப்பக்கடிதம் அளிக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் அனைத்து மருத்துவப் படிப்புக்கான மதிப்பெண் பட்டியல்கள் உள்பட அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் வரும் பிப்.16 மாலை 5 மணிக்குள் துணை இயக்குநா், சுகாதாரப்பணிகள், தருமபுரி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். உரிய கல்விச்சான்றுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப படிவத்தை தருமபுரி மாவட்ட வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களை தருமபுரி மாவட்ட வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT