முகப்பு
தருமபுரி

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவன் தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 24 ஏப்ரல் 2026, 5:32 am IST
- கோப்புப் படம்
பகிர்:

பாப்பாரப்பட்டி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவன் தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே நல்லப்பநாயக்கன அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (25), முடிதிருத்தும் தொழிலாளி. இவா் பாப்பாரப்பட்டி மாட்டுச்சந்தை பகுதியில் உள்ள கழிப்பிட வளாகத்தில் தனது மனைவியான முதுகம்பட்டி பாக்கியம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த விஜயலட்சுமியை அண்மையில் கழுத்தறுத்து கொலை செய்தாா். பின்னா் தற்கொலைக்கு முயன்ற அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement