தில்லியில் மனைவி, 4 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற நபர்!
தில்லியில் மனைவி, 4 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு நிலவியது.
தில்லியில் மனைவி, 4 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு நிலவியது.
தில்லியின் வஜீர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் நஜிம். இவர், தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைக் கொன்றுவிட்டு பின்னர் மணிக்கட்டுகளை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு அந்த நபரின் சகோதரர் வீட்டிற்குத் திரும்பியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. முதல் மாடியில் குடும்பத்தினர் மயக்க நிலையில் கிடப்பதை அவர் கண்டார். உடனே அவர் அனைவரையும் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
Advertisement
ஆனால் மருத்துவர்கள் அந்தப் பெண்ணும் நான்கு குழந்தைகளும் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக அறிவித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அந்த நபர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நஜிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு சிகையலங்கார நிலையம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி நஸ்மா (35), மற்றும் அவர்களது குழந்தைகள் இக்ரா (14), ஷிஃபா (11), ஆரம் (9) மற்றும் கதிஜா (6) ஆவர். தங்கள் குடும்பத்தினர் வாழ விரும்பவில்லை என்று நஜிம் போலீஸாரிடம் கூறியதாக மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
நஜிம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றாரா அல்லது கழுத்தை நெரித்துக் கொன்றாரா என்பது விசாரணையில் உள்ளது. "நாங்கள் உடல்களைப் பிரேதக் கிடங்கில் வைத்து, அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்," என்று உதவி காவல் ஆணையர் நவீன் சர்மா கூறினார்.
A man allegedly killed his wife and their four children before attempting suicide by slitting his wrists at their home in Wazirpur village here, police said on Sunday.