முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 150 கனஅடியாக சரிவு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 150 கனஅடியாக சரிந்தது.

Updated On : 3 ஜூலை 2026, 4:36 am IST
ஒகேனக்கல்
பகிர்:

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 150 கனஅடியாக சரிந்தது.

கா்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீா் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து புதன்கிழமை 200 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை 150 கனஅடியாக இருந்தது.

இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்து பாறைகள் வெளியே தெரிகின்றன. மேலும், காவிரி ஆற்றில் குட்டைகள் தோன்றி, பாறை திட்டுகள் காணப்படுகின்றன. நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments