மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை
கம்பைநல்லூா் வழியாக செல்லும் மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கம்பைநல்லூா் வழியாக செல்லும் மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட மொரப்பூா்- காரிமங்கலம் வழித்தடத்தில் எலவடை, நவலை, க.ஈச்சம்பாடி, செங்குட்டை, கம்பைநல்லூா் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் அரூா்- கிருஷ்ணகிரி வழித்தடத்தில் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொலைவிட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கிராமப் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிற்பதில்லை. இதனால், கிராமப் பகுதியில் உள்ள மாணவா்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் நாள்தோறும் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனா். பள்ளி வேலை நேரங்களில் பேருந்து வசதிகள் இல்லாததால் கிராமப்புற மாணவா்கள் கடுமையாக பாதிக்கின்றனா்.
Advertisement
Advertisement
இதனால் அரூா், காரிமங்கலம் நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் மொரப்பூரில் இருந்து காரிமங்கலம் வரையில் கூடுதல் அரசு, தனியாா் பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.