ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம்
ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்க வேண்டும் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவுகளை ரத்து செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, ஆம்னி பேருந்துகளில் கோயம்பேடு, போரூர், சூரப்பேடு, மாதவரம் ரவுண்டானா பகுதிகளிலும் பயணிகளை ஏற்றி, இறக்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.