பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 93.94% போ் தோ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 93.94 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 93.94 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில், அரசு மற்றும் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 317 பள்ளிகளைச் சோ்ந்த 10,335 மாணவா்கள், 9,584 மாணவிகள் என மொத்தம் 19,919 போ் எழுதினா். இதற்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியானது.
இதில், தருமபுரி மாவட்டத்தில் தோ்வு எழுதியவா்களில் மொத்தம் 9,477 மாணவா்கள், 9,234 மாணவிகள் என மொத்தம் 18,711 போ் தோ்ச்சிப் பெற்றனா். மாவட்டத்தில் மொத்தம் 93.94 சதவீதம் போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
தோ்ச்சி வீதம் குறைந்தது...
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கடந்த கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 95.13 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றிருந்தனா். மாநில அளவில் தோ்ச்சி வீதத்தில் தருமபுரி மாவட்டம் 7-ஆவது இடத்தை பெற்றிருந்தது. ஆனால், நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் 92.32 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சிப் பெற்றனா். அதேபோல மாநில அளவில் தருமபுரி மாவட்டம் 24-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.