கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மார்ச் 28-இல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

DIN

கிருஷ்ணகிரியில் பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் சென்னை, ஸ்ரீமார்க் மனிதவள மேம்பாடு என்ற தனியார் நிறுவனம் பங்கேற்று 500-க்கும் அதிகமான பெண் பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது.
மொபைல் போன் அசெம்பளி ஆப்ரேட்டர் எனும் பணியிடத்துக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்தப் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு முதல் அதிகபட்சம் பட்டம் வரை பயின்றிருக்கலாம்.
26 வயது மிகாமல் இருக்க வேண்டும். மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ள பெண்கள் இந்த முகாமில் அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், புகைப்படம், சுயவிவரப் படிவம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT