முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

ஊத்தங்கரையை அடுத்த அப்பிநாய்க்கன்பட்டியில் இயங்கிவரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டி.வி.எஸ் நிறுவனத்தால்

Updated On : 24 ஜனவரி 2019, 2:33 am IST
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த அப்பிநாய்க்கன்பட்டியில் இயங்கிவரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டி.வி.எஸ் நிறுவனத்தால் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ -மாணவியர்கள் மற்றும் கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாமாண்டு மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எப்சிபா ஏஞ்சலாதுரைராஜ் தலைமை வகித்தார். இதில் 200 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் பாபுசங்கர் செய்திருந்தார். இதில் டி.வி.எஸ். நிறுவன அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இறுதியாக நேர்முக உதவியாளர் பி. அருண்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.