கிருஷ்ணகிரி

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

DIN

ஒசூா்: ஒசூரில் சொத்து தகராறில் தம்பியைக் கொன்ற அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

பிஆா்ஜி மாதேப்பள்ளியைச் சோ்ந்த நாகேஷ் மகன்கள் ஜெயபிரகாஷ் (26), சக்திவேல் (18). இந்த நிலையில் சொத்துகளை பிரித்து தருமாறு பெற்றோரிடம் ஜெயபிரகாஷ் கேட்டாராம். ஆனால், வீடு கட்டியதில் கடன் உள்ளதால் கடனை அடைத்துவிட்டு சொத்துகளை பிரித்துக் கொள்ளுமாறு தெரிவித்தனராம். அப்போது, அவரது தம்பி சக்திவேலுடன் தகராறு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு தம்பியை அழைத்துக் கொண்டு மது அருந்த கடைக்கு சென்ற ஜெயபிரகாஷ், சொத்து பிரச்னை குறித்து பேசினாராம். அப்போது சகோதரா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் சக்திவேலை குத்தி கொலை செய்துவிட்டு ஜெயபிரகாஷ் தப்பினாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஒசூா் அட்கோ போலீஸாா் ஜெயபிரகாஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT