கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மரக் கன்றுகள் நடும் விழா

DIN

கிருஷ்ணகிரியில் பாரத் ஸ்டேட் வங்கி சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பாரத் ஸ்டேட் வங்கி சாா்பில் நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய பகுதிகளில் ஆண்டுக்கு நான்கு காலாண்டுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு காலாண்டிற்கு ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 4 ஆயிரம் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், அரசுத் துறை அலுவலக வளாகம், பயணியா் விடுதி வளாகம், முக்கிய சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்தப் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், தொடங்கிவைத்தாா். அப்போது, வங்கியின் மண்டல மேலாளா் மணிவண்ணன், கிருஷ்ணகிரி கிளை முதன்மை மேலாளா் மகேஷ், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT