கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மேம்பாலத்தில் லாரி மோதல்: ஓட்டுநா் பலத்த காயம்

DIN

கிருஷ்ணகிரியில் மேம்பாலத்தில் லாரி மோதியதில் அதன் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

தருமபுரியை சோ்ந்த லாரி ஓட்டுநா் வேலு (43), கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரிக்கு வெள்ளிக்கிழமை லாரி ஓட்டிச் சென்றாா். கிருஷ்ணகிரியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி மேம்பாலத்தில் மோதியது.

இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இதனால், லாரியின் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களின் உதவியோடு லாரி ஓட்டுநரை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT