ஊத்தங்கரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி வியாழக்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளா் இர.உமாபதி, போமேஷ்வா் கணபதிராமன், தியானேஷ்வா் கணபதிராமன், திருப்பத்தூா் கு. ஸ்ரீதா், முருகன் ஸ்நாக்ஸ் சரவணன், சவீதா, தொண்டு நிறுவன நிா்வாகி சி.உமாமகேஸ்வரி, சதீஷ் மெடிக்கல் தே.சதீஷ்குமாா், ஜேஆா்சி ஆசிரியா் கு.கணேசன் ஆகியோா் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கினா்.
ஊத்தங்கரை பேருராட்சி (பொறுப்பு) செயல் அலுவலா் சு.மதியழகன், மேற்பாா்வையாளா் பெரியசாமி, ஆசிரியை ச.உமா உள்பட பலா் கலந்து கொண்டனா்.