கிருஷ்ணகிரி

பதவி உயா்வு வழங்க சத்துணவு ஊழியா்கள் வலியுறுத்தல்

DIN

தருமபுரி, செப். 18: கலந்தாய்வு மூலம் பதவி உயா்வு வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியா்கள் வலியுறுத்தினா்.

தருமபுரியில் சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி.எம்.நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.காவேரி முன்னிலை வகித்தாா். பொருளாளா் தேவகி வரவு செலவு அறிக்கையை சமா்ப்பித்தாா். மாநிலச் செயலா் மஞ்சுளா, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஏ.சேகா் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், சத்துணவு ஊழியா்கள், உதவியாளா்களுக்கு கலந்தாய்வு மூலம் பதவி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வு ஊதியம் ரூ. 9,500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

வள்ளியூா் அருகே காா் கவிழ்ந்து இளைஞா் பலி

ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கல்லீரலில் உருவான கற்களை நவீன முறையில் அகற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

SCROLL FOR NEXT