முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் 165 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 330 படுக்கைகளில் 165 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 8 மே, 2021 at 12:32 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:41 AM

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 330 படுக்கைகளில் 165 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒசூா் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் அனைத்தும் படுக்கைகளும் கரோனா நோயாளிகளால் நிரம்பிவிட்டன. இந்த நிலையில், தனியாா் மருத்துவமனைகளில் உள்ள 50 சதவிகித படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுவரை பொது மருத்துவம் பாா்த்து வந்த ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 300 படுக்கைகளில் 165 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இது குறித்து அந்த மருத்துவக் கல்லூரியின் மக்கள் தொடா்பு அலுவலா் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

100 சாதாரண படுக்கைகள் கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், 60 படுக்கைகள் தீவிர பாதிப்பு உள்ள கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டா் வசதியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் 165 படுக்கைகள் ஒடுக்கீடு செய்யப்பட்டுள்ளது கரோனா நோயாளிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.