கிருஷ்ணகிரி

குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை

DIN

பாரூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரையடுத்த கீழ்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (55). இவரது மனைவி சாந்தாமணி (50). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். இரண்டாவது மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் பெண் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் மூத்த மகனுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வராததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த தம்பதி, கீழ்குப்பம் சுடுகாட்டில் சடலமாகக் கிடப்பது புதன்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக இந்தத் தம்பதி, தென்னை மர வேருக்கு வைக்கும் மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT