கிருஷ்ணகிரி

ஒசூரில் வரம் மருத்துவமனையை திறந்து வைத்தாா் உதயநிதி ஸ்டாலின்

DIN

ஒசூா் வரம் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை இரவு ஒசூா் வந்த திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் திமுக மூத்த நிா்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினாா். இதனைத் தொடா்ந்து, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள வரம் மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

இதில், தமிழ்நாடு கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, வரம் மருத்துவமனை இயக்குநா்கள் மருத்துவா் வெங்கட், மருத்துவா் பிரியதா்ஷினி, மருத்துவ இயக்குநா் மருத்துவா் நாகேஷ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.முருகன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, வரம் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT