கிருஷ்ணகிரி

சாலை விபத்து: இருவா் பலி

DIN

ஊத்தங்கரை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்தாா்.

பாம்பாறு அணை அருகே உள்ள கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான ரவி (35), விஜய் (27), இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்னப்பநாயக்கனூரில் இறப்பு ஒன்றுக்கு சென்று விட்டு மதுபோதையில் திரும்பினா். சென்னப்பநாயக்கனூா் பகுதியில் உதவி கேட்ட தேவராஜ் (60) என்பவருடன் சோ்ந்து மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, சென்னப்பநாயக்கனூா் அருகே நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில், இருசக்கர வாகனத்தை ஓட்டிய ரவி, உதவி கேட்டு வந்த தேவராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயங்களுடன் சாலையோரம் விழுந்த விஜயை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT