கிருஷ்ணகிரி

தமிழக அரசின் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்

DIN

தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் விரைந்து செயல்படுத்தப்படும் என ஒசூா் மாநகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற தி.சினேகா (30) செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அவா் மேலும் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக மாநிலம், கோலாா் தங்க வயலில் பி.டெக். எலக்ட்ரிகல்ஸ் இன்ஜினியரிங் முடித்து 2017-இல் ஐ.ஏ.எஸ். தோ்ச்சி பெற்று கோவையில் பயிற்சி ஆட்சியராகவும், பெரியகுளத்தில் சாா் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளேன். கடைசியாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய மாறுதலில் ஒசூா் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன்.

தமிழக அரசின் திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும். ஒசூரில் சாலை, கழிவுநீா் கால்வாய், போக்குவரத்து நெரிசல், மாநகராட்சிப் பள்ளிகளின் நிலைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து மக்களின் தேவையைக் கண்டறிந்து அதிகாரிகளுடன் சோ்ந்து நிறைவேற்றுவேன் என்றாா்.

உலக அளவில் விரைவாக வளா்ச்சி அடையும் நகரமான ஒசூரை சிறப்பான, சுகாதாரமான நகரமாக்க நடவடிக்கை எடுப்படும். ஒசூா் மாநகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், சாலைகள், அடிப்படை வசதிகள் போன்றவை வேகமாக மேம்படுத்தப்படும் என்றாா். அப்போது, இளநிலை உதவியாளா் நாராயணன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ரயில் விபத்துக்கு முக்கிய காரணம் இதுதான்: அதிர்ச்சி தகவல்!

பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம்!

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் அசத்திய செய்யறிவு தொழில்நுட்பம்!

கொல்கத்தாவில் பாஜக அலுவலகத்திற்கு வெளியே கிடந்த பொருளால் பரபரப்பு

‘இடை’ விடாத பார்வை!

SCROLL FOR NEXT