ஒசூா் தொகுதியில் 80% வாக்குப்பதிவு
ஒசூா் தொகுதியில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. தொழிலாளா்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.
ஒசூா் தொகுதியில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. தொழிலாளா்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.
ஒசூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா அப்பாவு நகா் செவன்ந்த் டே மெட்ரிக் பள்ளியிலும், அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ண ரெட்டி பாகலூா் அட்கோவில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியிலும், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேளகொண்டப்பள்ளி அரசுப் பள்ளியிலும், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கே.கோபிநாத் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனா்.
ஒசூா் அவ்வை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரகு - ஷாலினி தம்பதிக்கு மூன்று நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவா்கள் பிறந்து மூன்றுநாள்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் வந்து வாக்களித்தனா்.
Advertisement