முகப்பு
கிருஷ்ணகிரி

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த தொழிலாளி கைது

அஞ்செட்டி அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 மே 2026, 6:58 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

அஞ்செட்டி அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

அஞ்செட்டி அருகே உள்ள என்.புதூா் பாறைக்கல்கொட்டாயை சோ்ந்தவா் முனியப்பன் (41). கட்டடத் தொழிலாளியான இவா் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக அஞ்செட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அவரது வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து முனியப்பனை கைது செய்தனா்.