லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவி சாதனை
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவி தமிழ் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
இந்தப் பள்ளி மாணவி என்.எம். ஹேமபாரதி, பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடத்தில் வந்துள்ளார். மேலும், இவர், 1200-க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 5-ஆம் இடத்தையும், பள்ளியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
மாணவி ஹேமபாரதியை பள்ளியின் தலைவர் வெங்கடாசலம், செயலாளர் பாலகிருஷ்ணன், இயக்குநர்கள், தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
Advertisement
Advertisement