முகப்பு
நாமக்கல்

அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு 

திருச்செங்கோட்டை அடுத்த உஞ்சனை சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார். 

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:37 am IST
பகிர்:

திருச்செங்கோட்டை அடுத்த உஞ்சனை சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
 முகாசி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (28). கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தனது வயலில் விவசாயம் செய்து வந்தார். இவர், தனது இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
 உஞ்சனை அருகே சென்றபோது அந்த வழியாகச் வந்த அரசுப் பேருந்து இவர் மீது மோதியது. இதில் மகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.