ஏழை மாணவி மருத்துவப் படிப்புக்கு ரூ.43 ஆயிரம் உதவி
மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்த ஏழை மாணவியின் கல்வி உதவித் தொகையாக ரூ.43 ஆயிரம் வழங்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்த ஏழை மாணவியின் கல்வி உதவித் தொகையாக ரூ.43 ஆயிரம் வழங்கப்பட்டது.
ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ச.மோனிகா என்ற மாணவி 12-ம் வகுப்பில் 1169 மதிப்பெண்களும், 10-ம் வகுப்பு தேர்வில் இவர் 497 ம் பெற்றிருந்தார். இம் மாணவி நீட் தேர்வில் 275 மதிப்பெண்கள் பெற்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் பயில வாய்ப்பு பெற்றுள்ளார். மாணவியின் பெற்றோர் கூலி தொழிலாளிகள் என்பதால், பயில வசதியில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மருத்துவக் கல்வி பயில ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளியின் தலைமையாசிரியர் மு.ஆ.உதயகுமார் ரூ.10 ஆயிரம் கல்வி உதவி தொகையாக வழங்கினார். இதே போல், ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோயில் தலைவர் பழனிசாமி மகன் பி.சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் சார்பாக ரூ.30 ஆயிரம் வழங்கினர்.
புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் பி.சௌந்தரராஜன், து.முத்துக்குமார் உள்ளிட்டோர் என மொத்தம் ரூ.43 ஆயிரம் மாணவிக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.