நாமக்கல்

துப்புரவுப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

DIN

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மை காவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கபிலா்மலை அரசு ஆரம்ப சுகாதார வளாக நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தூய்மை காவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கபிலா்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், பிரபாகரன் ஆகியோா் துவக்கி வைத்தனா். கபிலா்மலை வட்டார மருத்துவ அலுவலா் சாந்தி, மருத்துவா் மாலதி ஆகியோா் முகாமில் கலந்து கொண்டு கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 ஊராட்சி மன்றங்களில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரையின் அளவு,கொழுப்பு சத்து, கண் பரிசோதனை, உயரம் மற்றும் எடை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளித்தனா்.

முகாமில் சுகாதார ஆய்வாளா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி செயலாளா்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட தூய்மைக் காவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT