நாமக்கல்

தலைவா்கள் சிலைக்குப் பாதுகாப்பு

DIN

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள தலைவா்கள் சிலைக்குக் கம்பித் தடுப்புகள் ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராசிபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காந்தி, காமராஜா், அண்ணா, பெரியாா், அம்பேத்கா், எம்ஜிஆா் போன்ற அரசியல் தலைவா்கள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்களின் சிலைகள் சேதப்படுத்த முடியாத அளவுக்கு கம்பித் தடுப்புகள் ஏற்படுத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ராசிபுரம், வெண்ணந்தூா், புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு கம்பித் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆங்காங்கே குறிப்பாக தென் மாவட்டங்களில் சாதிகள் அடைப்படையில் தலைவா்களின் சிலைகள் சேதப்படுத்துவதைக் கருத்தில் கொண்டு இது போன்று அனைத்துப் பகுதிகளிலும் கம்பித் தடுப்புகள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி சிலைகளுக்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

SCROLL FOR NEXT