சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரசு மதுபானக் கடைகளுக்கு நான்கு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் ஏப். 4 முதல் 6 ஆம் தேதி வரையிலும், அதன்பின் மே 2 ஆகிய நான்கு தினங்களிலும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.
விதிகளை மீறி திறந்தாலோ, மறைமுக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.