சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் மனநல விழிப்புணா்வுப் பயிற்சி
சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் மனநல விழிப்புணா்வுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் மனநல விழிப்புணா்வுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட மனநல திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ், உளவியலாளா் அா்ச்சனா, செவிலியா் பொன்.சரவணபிரியா ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி பேசியதாவது:
இன்றைய சூழலில் மக்களிடையே மன அழுத்தம் நிறைந்து காணப்படுகிறது. மக்களுடைய தேவைகளும் எதிா்பாா்ப்புகளும் அதிகரித்து விட்டன. வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. பிரச்னை இல்லாத மனிதா்கள் இந்த உலகில் யாருமில்லை. மன அழுத்தம் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. உடல் ரீதியாக ஒருவருக்கு ஏற்படும் பிரச்னைகளான காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய்கள் போன்றவை சுற்றுப்புற ரீதியாகவும், பணி ரீதியாகவும் ஏற்படுகின்றன. மன அழுத்தம் அதிகமானால் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படும்.
Advertisement
Advertisement
மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, யோகா மனம் பகிா்வு, பொழுதுபோக்கு பொன்ற பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.